தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குந்துக்கோட்டை மல்லிகார்ஜூனா துர்க்கம் மலைக்கோயில் தேர்திருவிழாவையொட்டி, நேற்று எருதாட்டம் நடந்தது. இதனை காண சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது அலங்கரிக்கப்பட்ட காளைகள், ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. எருதாட்டத்தை வேடிக்கை பார்க்க கேரட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முனியப்பா(எ) சின்னபையன்(38) என்பவரும் வந்திருந்தார்.