சென்னை: சினிமாவில் நடித்து வந்த துணை நடிகை குடும்ப பிரச்னை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் பவன். இவரது மனைவி பத்மஜா (23). இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். பத்மஜா சினிமாவில் சிறு, சிறு வேடங்களில் துணை நடிகையாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் நடிப்பது மற்றும் கணவரின் வேலை குறித்து அடிக்கடி குடும்பத்துக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கணவர் பவன் மனைவியிடம் தகராறு செய்துவிட்டு சொந்த ஊரான ஆந்திராவிற்கு சென்றுள்ளார்.