கொல்கத்தா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜ ஆட்சி அமையும்,’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு பாராட்டு தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு கொல்கத்தாவில் உள்ள ஷாகித் மினார் மைதானத்தில் ேநற்று பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அமித்ஷா பேசியதாவது:
தீவிரவாதத்தை அரசு ஒருபோதும் சகித்து கொள்ளாது. பிரதமர் மோடி தலைமையின் கீழ், வெளியுறவு கொள்கைகளில் இருந்து மாறுபட்ட, ஆக்கப்பூர்வமான பாதுகாப்பு கொள்கையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால், சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தும் முன்னணி நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல் வரிசையில் இந்தியா இடம் பிடித்துள்ளது.