மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து கவுகாத்தி புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. உடனடியாக கண்டறியப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 127 பேர் உயிர் தப்பினர். சென்னையில் இருந்து கவுகாத்தி செல்லும் விமானம் நேற்று காலை 4 மணிக்கு புறப்பட வேண்டும். ஆனால் அந்த விமானம் மாலை 6 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த விமானம் 122 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உள்பட 127 பேருடன் மாலை 6 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு விமான ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தது.