சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை பக்தர்கள் வசதிக்காக இணையதள சேவை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இ-பூஜா, இ-தங்கும் அறை, இ-அன்னதானம், இ-ரதம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகள் மூலம் பக்தர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தும் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தின் மூலம் பெரும்பாலான பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த இணையதள பிரிவு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில் இந்த இ-சேவை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவசர, அவசரமாக அறநிலையத்துறை சார்பில் முதற்கட்டமாக 5 கோயில்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட்டது.