சென்னை: ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியில் நடக்கும் பணிகளை முடிப்பதில் மெத்தனம் காட்டிய சுற்றுலாத்துறை திட்ட மேலாண்மை அலகு பொது மேலாளரை திடீரென அப்பொறுப்பில் இருந்து விடுவித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் சுற்றுலா தலங்களில் ஓய்வுக்கூடங்கள், கழிவறைகள், அணுகு சாலைகள், உடை மாற்றும் அறைகள், வாகன நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, வழிகாட்டி பலகைகள் நிறுவுதல் போன்றவை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சுற்றுலா தலங்களில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், கடந்தாண்டு ஜூன் மாதம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி மூலம்300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை கொண்டு காஞ்சிபுரம், பெரும்புதூர், ஒகேனக்கல், திருச்சி, சிதம்பரம், ஆலங்குடி உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலா உட்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர் விட்டதில் குளறுபடி, பில் செட்டில் செய்வதில் தாமதம் உள்ளிட்ட பல் ேவறு காரணங்களால் தற்போது வரை 30 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது.