சென்னை: வருகிற 11, 12, 13ம் தேதி நடக்கவிருந்த வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கடந்த ஜனவரி 31ம் தேதி, பிப்ரவரி 1ம் தேதி ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் வருகிற 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்திருந்தனர். வங்கி ஊழியர்களின் 3 நாட்கள் ஸ்டிரைக் மற்றும் மார்ச் 14ம் தேதி 2வது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை. மறுநாள் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்று வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்ற நிலை உருவானது.