சென்னை: ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு நாளை முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டுகிறார். ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாளை காலை 10 மணிக்கும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நாளை மாலை 3 மணிக்கும் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.