சென்னை: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 300 பேரை மீட்கக்கோரி வெளியுறவுத்துறை அவைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் ஈரானில் வேகமாக பரவி வருவதால் தமிழர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் நாடு திரும்ப உதவுமாறு ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு உத்தரவிடவும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க்கக்கோரி வெளியுறவுத்துறை அவைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்
- முதல் அமைச்சர்
- எடப்பாடி
- வெளியுறவு அமைச்சகம்
- எடப்பாடி பழனிசாமி
- ஈரான்
- தமிழர்கள்
- அவதார் ஜெய்சங்கர்
- வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
- தமிழ்நாடு மீனவர்கள்