சென்னை: தலைவி படத்தை எதிர்த்து தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பதில் மனுதாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் “குயின்” என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர். அதற்கு தடை கேட்டு தீபா வழக்கு தொடர்ந்திருந்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டதால் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.