குடும்பத்துடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் சாவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், பாக்கம் கிராமம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ஹேமநாதன் (20). சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் தனது சகோதரன் மோகன் மற்றும் அக்கா கலைவாணி, தங்கை ஜீவிதா உடன் மெரினா கடற்கரைக்கு சுற்றி பார்க்க வந்துள்ளார்.  பின்னர் உழைப்பாளர் சிலை பின்புறம் தனது சகோதரனுடன் ஹேமநாதன் குளித்துள்ளார். அப்போது ராட்சத அலையில் சிக்கி ஹேமநாதன் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அவரது சகோதரன் மோகன் மற்றும் அவரது சகோதரிகள் கூச்சலிட்டனர். இதை கவனித்த பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் உடனே ஹேமநாதனை மீட்டனர். ஆனாலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஹேமநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினா கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: