ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதி திடீர் மரணம்

புழல்: சென்னை கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டி பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் என்ற ராஜசேகர் (72). இவர், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 2011ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2016 பிப்ரவரி 24ம் தேதி முதல் கடலூர் சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 31ம் தேதி ஆபிரகாமுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புழல் மத்திய சிறையில் பதிவு செய்துவிட்டு கடந்த 16ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஆபிரகாம் இறந்தார். புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: