சென்னை: சென்னை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கெமிக்கல் கழிவு, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியவை அடையாறு ஆற்றில் சுத்திகரிப்பு செய்யாமல் விடப்படுகின்றன. இதனால் அடையாற்றின் நீர் மாசுப்பட்டு கடலில் கலக்கிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அடையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.