சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் ஒரே சாலை பராமரிப்பில் மோசடியை தடுக்க கலெக்டர் அனுமதி அளித்தால் தான் கான்டிராக்டர்களுக்கு பணத்தை தர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலை துறைக்கு அரசு அனுப்பி உள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியுதவியில் திட்டம் சாராதவை என்கிற பெயரில் சாலைகளின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழும், சிறப்பு பழுது பார்க்கும் பணிகள் என்ற பெயரில் ஒரே சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இ-பாதை திட்டத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகிறது.