திருமலை: கீழ்திருப்பதியிலிருந்து திருமலைக்கு மோனோ, மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பித்த பின் முடிவு செய்யப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறினார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது: திருமலையின் புனிதத்தன்மையை காப்பதோடு, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என உறுதி அளித்திருந்தேன். வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்த மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை இயக்குவதற்கு முதலில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதன் செலவு தொகை அதிகமாக உள்ளது.