சென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரும் 27ம் தேதி பகல் 12 மணிக்கு மாமல்லபுரத்துக்கு குடும்பத்தோடு வந்து தங்குகிறார். மறுநாள் 28ம் தேதி காலை மாமல்லபுரம் சிற்பக் கல்லூரிக்கு சென்று அங்குள்ள கற்சிற்பம், சுதை சிற்பம், மரச்சிற்பம் உள்ளிட்டவற்றை பார்வையிடுகிறார். பின்னர், வட நெம்மேலியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்று ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார்.