சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 7வது முறையாக 4 மாதம் காலநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடந்தத நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் கடந்த 2017 செப்டம்பர் 25ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் 3 மாதத்திற்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யும் என்று தமிழக அரசு கூறியது. ஆனால், ஆணையத்தின் விசாரணை ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த விசாரணையில் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், மகள் தீபா, போயஸ் கார்டனில் வேலை செய்த ஊழியர்கள் உள்பட பல தரப்பிடம் விசாரிக்கப்பட்டது.