மொடக்குறிச்சி: சிவகிரி அருகே கோயில் விழாவில் ஒரு எலுமிச்சம் பழம் ₹25 ஆயிரத்துக்கு ஏலம் போனது.ஈரோடு சிவகிரி அருகே விளக்கேத்தி, புது அண்ணாமலைபாளையத்தில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர் என்ற சித்தர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு இரண்டு நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் பெரியவீட்டு கோயில் முன்பாக பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர் சாமி பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சம்பழம் ஏலம் விடப்பட்டது.