சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிரவாத தாக்குதல் நடந்தால் தடுப்பது எப்படி? என்று நடத்தப்பட்ட ஒத்திகையில், முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்ததற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் தீவிரவாத தாக்குதலுக்கான அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குள் தீவிரவாதிகள் நுழைந்தால் எப்படி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வது என்பது தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை சென்னை காவல்துறையால் நடத்திக்காட்டப்பட்டது.
சென்னை அரசு மருத்துவமனையில் தீவிரவாத தாக்குதல் ஒத்திகை முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததற்கு கண்டனம்: மனிதநேய மக்கள் கட்சி அறிக்கை
- தீவிரவாதிகள்
- பயங்கரவாத தாக்குதல் ஒத்திகை
- முஸ்லிம்கள்
- சென்னை
- மனிதாபிமான மக்கள் கட்சி
- அரசாங்க மருத்துவமனை