தாம்பரம்: தாம்பரம் அருகே எம்-சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காஞ்சிபுரம், ஆரப்பாக்கத்தில் இருந்து நேற்று காலை எம்-சாண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. காலை சுமார் 7:30 மணி அளவில் பெருங்களத்தூர் அருகே இரும்புலியூர் மேம்பாலத்தில் லாரி சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி சாலை நடுவே கவிழ்ந்தது.