சென்னை: ஓட்டேரி பகுதியில் புளியந்தோப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஓட்டேரி இஎஸ்ஐ குடியிருப்பு பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் சுரேந்தர் (19) என்பவரை மடக்கிப் பிடித்தார். அப்போது, அவர் ஹெல்மெட் அணியவில்லை. இதனால் அபராதம் விதிப்பதாகக் போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ கூறினார். இதனால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி எஸ்ஐ ரமேஷ், சுரேந்தரை கட்டையால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.