சென்னை: சென்னை துறைமுகத்தில் உள்ள 1,149 காலிபணியிடம் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையின் கீழ் இந்தியாவில் மொத்தம் 12 துறைமுக பொறுப்பு கழகங்கள் செயல்பட்டுவருகிறது. இந்த துறைமுகங்கள் வழியாக பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய், மேட்டார் உள்ளிட்டவைகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதைத்தவிர்த்து பயணிகள் போக்குவரத்தும் நடைபெற்றுவருகிறது. இந்த துறைமுகங்களை மேம்படுத்த சகார்மாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு பணிகளை செய்துவருகிறது. இந்த துறைமுகங்களில் உள்ள காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்று தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்ைக வைத்துவருகின்றனர். இதற்கிடையில் இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் விவரங்கள் வெளியாகிவுள்ளது.