சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: சட்டமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறவும், என்.ஆர்.சி.க்கு வழிகோலும் என்.பி.ஆர். தயாரிப்பதை நிறுத்தக் கோரியும், தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.