சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் கோரி இன்று முதல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்: முத்தரசன் அறிவிப்பு

சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: சட்டமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறவும், என்.ஆர்.சி.க்கு வழிகோலும் என்.பி.ஆர். தயாரிப்பதை நிறுத்தக் கோரியும், தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசு நாளை கூட உள்ள கூட்டத் தொடரில் மத்திய அரசு தனது குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்ற முன்வரவேண்டுமென்று வலியுறுத்தும் வகையில் பிப்ரவரி 17 தொடங்கி 20ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது.

Related Stories: