செங்கோட்டை: ஆரியங்காவு பாலருவி, இன்று முதல் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள கேரள மாநில சுற்றுலாத்தலமான ஆரியங்காவு பாலருவி, இன்று முதல் காலவரையின்றி மூடப்படுகிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், அருவிக்கு நீர்வரத்து குறைந்தளவிலேயே உள்ளது. மேலும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அருவி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.