சென்னை: சர்வதேச தாய்மொழி தினத்தை அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் கொண்ட வேண்டும் என்று யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு யுஜிசி செயலாளர் ராஜ்னீஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச தாய்மொழி தினத்தை பிரபலப்படுத்தும் விதமாக குறிப்பிட்ட நாளில் மொழிசார்ந்த கலாச்சார நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடத்தப்படும். அதன் அடிப்படையில் பிப்ரவரி 21ம் தேதி நாடு முழுவதும் தாய்மொழி தினத்தை கொண்டாடி தாய் மொழி தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். தாய் மொழி மட்டுமல்லாது, பிற இந்திய மொழிகளை பேச, எழுத கற்றுக்கொள்வதற்கு மாணவர்களை ஊக்குவிக்கலாம்.