பெங்களூரு: பெங்களூருவில் நாட்டில் முதல்முறையாக பெண்களுக்கு என தனியாக பார் மற்றும் உணவகம் வரும் மார்ச் 8ம் தேதி திறக்கப்பட உள்ளது. ‘மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு’ என்பதால் அதனை தங்கள் பகுதிகளில் இருந்து அகற்ற வேண்டும் என பல தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மதுபானம் விற்பனையில் பெண்கள் பெரிதும் துயரத்தை சந்திக்க நேர்கிறது. குடும்பங்கள் வறுமையில் வாடுவதற்கு முதல் காரணமாக, ஆண்களிடம் உள்ள மது பழக்கம் உள்ளது. வீட்டின் குடும்ப தலைவர்கள் மதுபழக்கத்திற்கு ஆளாவதால் குழந்தைகள் தங்கள் கல்வியை இழந்து, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இழந்து தவித்து வருகின்றனர். பெங்களூருவில் வார இறுதியில் நள்ளிரவு வரை மதுபான கடைகள் திறந்து வைத்துள்ளதால் ஏராளமானோர் குடித்து விட்டு வாகனத்தில் செல்லும் போது விபத்துகள் நடைபெறுகிறது. இதனை தடுக்க மாநகர போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர். இருப்பினும் விபத்துகள் குறையவில்லை.