முத்துப்பேட்டை அருகே வாகனம் மோதி மயில் பலி

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் மில்லடி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை இரைதேடி அங்குமிங்குமாக பறந்த பெண் மயில் அப்பகுதியை கடந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு அங்கேயே இறந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் இறந்த மயிலை மீட்டு அதேபகுதியில் குழிதோண்டி புதைத்தனர்.

இதுபோன்று சம்பவங்கள் அடிக்கடி இப்பகுதியில் நடந்து வருவதால் இப்பகுதியில் உள்ள மயில்களை காப்பாற்ற சரணாலயம் மற்றும் அலையாத்திக்காடுகள் பகுதியில் மயில்கள் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று இப்பகுதி பறவைகள் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: