அடிப்படை வசதிகள் கேட்டு புதுவை பல்கலை. மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காரைக்கால்: புதுவை பல்கலைக்கழக மாணவர்கள், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கோரி காரைக்காலில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். காரைக்கால் நேருநகர் அருகே உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், புதுவை பல்கலைக்கழகம், இயங்கி வருகிறது. ஆனால், இக்கல்லூரியில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தூய்மையான கழிவறை, கேன்டீன், நெட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர கோரி, கல்லூரி நிர்வாகத்திடம், மாணவர்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லையென கூறப்படுகிறது.

கல்லூரி நிர்வாகத்தின் இச்செயலை கண்டித்து, கல்லூரி சாலையில், நேற்று கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை கல்லூரி டீன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: