காரைக்கால்: புதுவை பல்கலைக்கழக மாணவர்கள், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கோரி காரைக்காலில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். காரைக்கால் நேருநகர் அருகே உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், புதுவை பல்கலைக்கழகம், இயங்கி வருகிறது. ஆனால், இக்கல்லூரியில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தூய்மையான கழிவறை, கேன்டீன், நெட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர கோரி, கல்லூரி நிர்வாகத்திடம், மாணவர்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லையென கூறப்படுகிறது.