சீனா: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் நேற்று மற்றும் 116 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது. எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும் இந்த வைரசினால் சீனாவில் 1350 பேர் பலியாகியுள்ளதாகவும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சீன அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இந்நிலையில் சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,483 ஆக அதிகரித்துள்ளது.