தண்டையார்பேட்டை: காவல் நிலையத்தில் இருந்து பெட்டி திருடுபோனது தொடர்பாக போலீஸ்காரர் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது தொடர்பான தகவல் வாட்ஸ் அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராயபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி (46). பூக்கடை போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், பூக்கடை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் கடந்த மாதம் புகார் ஒன்றை அளித்தார். அதில், பூக்கடை காவல் நிலைய காவலர்கள் ஓய்வறையில், கடந்த 6 மாதங்களாக எனக்கு சொந்தமாக இரும்பு பெட்டி வைத்திருந்தேன். அதில் முக்கிய ஆவணங்கள் உள்ளன. வாரம் ஒருமுறை இங்கு வந்து ஓய்வெடுத்து செல்வேன். அதுபோல் கடந்த மாதம் வந்தபோது என்னுடைய இரும்பு பெட்டியை காணவில்லை. இதை கண்டுபிடித்து தரவேண்டும். இவ்வாறு தெரிவித்து இருந்தார்.