பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்ணின் கருவை கலைக்க அனுமதி

மதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தனது 26 வயது மகள் வலிப்பு நோயால் முடங்கியுள்ளார். இதை பயன்படுத்தி பக்கத்து வீட்டைச் சேர்ந்த காசி என்பவர், என் மகளை பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்ப்பமானதே தெரியாத நிலையில் என் மகள் உள்ளார். எனவே, கருவை கலைக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, 24 வார கருவை கலைக்க உடல்ரீதியாக பெண் தகுதி பெற்றுள்ளதாக டீன் அறிக்கை அளித்துள்ளதால் கருவை கலைக்கலாம். ஆனால், கருவிலுள்ள டிஎன்ஏவை டீன் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: