கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவம், கல்விக்கு ரூ.2லட்சம் உதவி தொகை

சென்னை:  திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டித்தொகை மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி வழங்கப்பட்டது. அது போக மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 97 லட்சத்து 90 ஆயிரம். மேலும், தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் 2020, ஜனவரி மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2,00,000 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: