சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 9 நீதிபதிகளை நிரந்தரம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பி.டி.ஆஷா, என்.நிர்மல்குமார், சுப்பிரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர். கடந்த 2018 ஜூன் மாதம் 7 பேரும், 2018 நவம்பர் மாதம் ஒரு நீதிபதியும், 2019 பிப்ரவரியில் ஒரு நீதிபதியும் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.