திருமலை: திருப்பதி கோயிலில் சிபாரிசு கடிதம் இல்லாமல் வந்தாலும் 200 ரூபாய்க்கு ஒரு பெரிய லட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் கல்யாண உற்சவ சேவை நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு 2 பெரிய லட்டுகள், 2 வடை மற்றும் 5 சிறிய லட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு சிறிய லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது. கல்யாண உற்சவத்தில் மட்டும் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்க கூடிய பெரிய லட்டுகள் சிபாரிசு கடிதத்தின் மூலம் ₹200 கட்டணத்தில் கோயிலுக்குள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.