வாடிப்பட்டி: வாடிப்பட்டி பகுதியில் அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்களால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டியிலிருந்து சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சோழவந்தான் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை பராமரிப்பில் உள்ள பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. ஆனால் இப்பணிமனையில் பல பேருந்துகள் முறையான பராமரிப்பின்றி உள்ளதால் அவை அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.