தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை மகாரத தேரோட்டம் நடந்தது. இதில் பெண்கள் மட்டுமே பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில், தைப்பூசத் தேர்த்திருவிழா 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை 7 மணிக்கு சிவசுப்ரமணியசுவாமி திருவீதி உலா நடந்தது. 8ம் தேதி சிவசுப்ரமணியருக்கு வள்ளி தேவசேனாவுடன் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை, விநாயகர் ரதம் திருவீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று (10ம் தேதி) சுப்ரமணியர் மகா ரதம் எனும் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர்த்திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு, கோயிலில் இருந்து சிவசுப்ரமணிய சுவாமி புறப்பாடு நடந்தது.