தூத்துக்குடி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்டரி காரை திருநங்கை டிரைவர் அபர்ணா இயக்கி வருகிறார்.தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கும், தங்களின் பல்வேறு தேவைகளுக்கும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் அதிகமாக வந்து செல்கின்றனர்.இவ்வாறு வந்துசெல்லும் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை ரோட்டிலுள்ள பஸ் நிறுத்தத்திலிருந்து கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் எளிதில் வந்து சென்றிட ஏதுவாக இலவசமாக பேட்டரி கார் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் பணி ஓய்வு பெற்றார். இதனால், பேட்டரி கார் இயக்கப்படாததால் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வந்தனர். பேட்டரி காரை இயக்க மாற்று டிரைவர் நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் டிரைவராக திருநங்கை நியமனம்
- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
- அலுவலக பேட்டரி கார் இயக்கி
- அலுவலக திருநங்கைகள் நியமனம்
- தூத்துக்குடி கலெக்டர்