திருவொற்றியூர்: திருவொற்றியூரில் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் உள்ள குப்பை குவியலில் தீவிபத்து ஏற்பட்டதால், சுற்றுப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி, கண் எரிச்சல், மூச்சு திணறலால் மக்கள் அவதிக்குள்ளாகினர். திருவொற்றியூர் பகுதியில் உள்ள சில தனியார் கம்பெனிகளில் சேரும் குப்பை கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கொட்டப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் குப்பை குவிந்து கிடப்பதுடன் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் இந்த குப்பை கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கலந்து வருவதால், இந்த பகுதியில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.