சென்னை: புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில், ஈரான் கைதியிடம் இருந்து செல்போன், சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது. புழல் தண்டனை சிறைச்சாலையில் சுமார் 600க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளில் சிலர் செல்போன் பயன்படுத்துவதாக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தண்டனை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில், சிறையிலுள்ள சோதனை கண்டறியும் குழுவினர் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முதல் வகுப்பு பிரிவில் உள்ள கழிவறையில் ஆண்ட்ராய்டு செல்போன், பேட்டரி சார்ஜர் கண்டுபிடிக்கப்பட்டது.