நந்தனம் பகுதியில் புதிதாக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா இயக்கத்தை கமிஷனர் துவக்கி வைத்தார்

சென்னை: நந்தனம் பகுதியில்  புதிதாக  பொருத்தப்பட்டுள்ள  அதிநவீன 9 ஏஎன்பிஆர் சி.சி.டி.வி கேமராக்களை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று  துவக்கி வைத்தார். சென்னை ரன்னர்ஸ் அசோசியேசன் சார்பில், சென்னை போக்குவரத்து காவல் துறைக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள அதிநவீன 9 ஏஎன்பிஆர் கேமராக்கள், நந்தனம் சந்திப்பு, ஹால்டா சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் 3 கேமராக்கள் வீதம் பொருத்தப்பட்டுள்ளன. மேற்படி புதிதாக பொருத்தப்பட்டுள்ள அதிநவீன சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்  நந்தனம் சிக்னல் அருகே நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அருண், இணை ஆணையர் (தெற்கு) எழிலரசன்,  போக்குவரத்து துணை ஆணையர் (தெற்கு) மயில்வாகணன், கல்லூரி  மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: