சென்னை: கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள 7 பறக்கும் ரயில் நிலையங்களில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை கடற்கரையில் இருந்து சிந்தாதிரிப்பேட்ைட, மயிலாப்பூர், திருவான்மியூர், பசுமை வழிச்சாலை, தரமணி, பெருங்குடி, வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், போக்குவரத்து இடையூறின்றி விரைந்து செல்ல முடியும் என்பதாலும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படுவதால் தனியாக செல்லும் பெண்களிடம் பாலியல் தொந்தரவு, திருட்டு போன்ற சம்வங்கள் அதிகம் நடைபெறுவதாக ஆர்பிஎப் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள 7 பறக்கும் ரயில் நிலையங்களில் மாஜி ராணுவ வீரர்கள் பாதுகாப்பு : முதற்கட்டமாக 15 பேர் நியமனம்
- பாதுகாப்பு படைகள்
- ரயில் நிலையங்கள்
- பறக்கும் நிலையங்கள்
- வேலச்சேரி முதல்
- Mariju
- பாதை
- வேளச்சேரி
- வீரர்கள்