சென்னை: தமிழகத்தை கொத்தடிமை முறையே இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வினீத் கோத்தாரி பேசினார். கொத்தடிமை முறை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதின் 44ம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அமைப்பு சார்பில் சென்னையில் ேநற்று கருத்தரங்கு நடந்தது. இதில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவருமான வினீத் கோத்தாரி, பிரிட்டிஷ் துணை உயர்நிலை ஆணையர் ஆலிவர் வாலேட் சட், ஐஜெஎம் அமைப்பின் இயக்குனர் மெர்லின் ரீட்டா, தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜசேகரன், பல்வேறு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.