சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 1503 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்தாண்டு ஜூன் 12ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று நாட்கள் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 1503 நபர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் கல்வி மேலாண்மை தகவல் மையம் மூலமாக கலந்தாய்வு நடத்தப்பட்டன.