திங்கள்சந்தை: திங்கள்சந்தை அருகே பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசேகர்(54). இவர் இரணியல் கோர்ட்டில் குமஸ்தாவாக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டு தோட்டத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன் ஒரு வாழை கன்று நட்டு வளர்த்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் அது குலை தள்ளியது. குலையில் ஓரளவு காய்கள் வந்த பின்னரும் கூம்பை ஒடிக்காமல் ஜெயசேகர் விட்டு விட்டார். தற்போது அந்த வாழை குலை 9 அடி உயரத்திற்கு உள்ளது. தொடர்ந்து காய்கள் வந்து கொண்டு இருப்பதால் நிலத்தில் தட்டாமல் இருக்க குழி தோண்டி வைத்துள்ளார்.