சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். தனி அதிகாரியை நியமித்தது செல்லும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட்டில் நடிகர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. நடிகர் சங்கத்தின் தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.