பெரம்பூர்: பேஸ்புக்கில் பெண்ணிடம் நட்பாக பழகி, காதல் வலை வீசி பணம் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (50). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகளுக்கு பேஸ்புக் மூலம் ஒரு வாலிபர் பழக்கமானார். அப்போது, அந்த பெண்ணின் தொடர்பு எண்ணை வாங்கிய வாலிபர், அடிக்கடி செல்போனில் பேசி காதல் வலை வீசியுள்ளார். நாளடைவில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தனது வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து நான் உங்களுக்கு தொல்லை கொடுத்து கொண்டே இருப்பேன் என மிரட்டியுள்ளார்.