ஆணழகன் போட்டி ரயில்வே ஊழியர் வெண்கல பதக்கம்

ஆலந்தூர்: ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ஆல் இந்தியா ரயில்வேயில் பாடிபில்டிங் சாம்பியன் ஷிப் போட்டியில் சென்னை ஆலந்தூரை சேர்ந்த ரயில்வே ஊழியர் வெண்கலப் பதக்கம் வென்றார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஆல் இந்தியா ரயில்வேயில் பாடிபில்டிங் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. இதில் பல மாநிலங்களில் இருந்து ரயில்வே துறையை சேர்ந்த ஆணழகன்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சென்னை ஆலந்தூரை சேர்ந்த ரயில்வே ஊழியரும் உலக ஆணழகனுமான எம்.அரசு கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றார். இதையடுத்து அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆணழகன் சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: