நாகர்கோவில் அருகே மலையில் பயங்கர தீ

பூதப்பாண்டி: குமரி  மாவட்டத்தில் தற்போது கோடையை மிஞ்சும் அளவிற்கு வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அழகியபாண்டியபுரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மலையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது.  மலையடிவாரத்தில் பூதப்பாண்டியை அடுத்த தெள்ளாந்தி ஊராட்சி, முடங்கன்விளை கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.  

சற்றுநேரத்தில் புகை மற்றும் தூசுகள் குடியிருப்புகளில் பரவ  தொடங்கியது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து மக்கள்  வனத்துறை மற்றும் பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் யாரும் வரவில்லை. இதனால் கிராமத்தினரே பல மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

Related Stories: