பூதப்பாண்டி: குமரி மாவட்டத்தில் தற்போது கோடையை மிஞ்சும் அளவிற்கு வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அழகியபாண்டியபுரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மலையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. மலையடிவாரத்தில் பூதப்பாண்டியை அடுத்த தெள்ளாந்தி ஊராட்சி, முடங்கன்விளை கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.