கோவை: தபால்துறையில் ஆட்கள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி கோவையில் நடந்த அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப் ‘சி’’ தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் 39வது தமிழ் மாநில மாநாடு கோவை தெலுங்குபாளையத்தில் நேற்று நடந்தது. மாநாட்டில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட் டத்தை சேர்ந்த அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றனர். இதில், தபால்துறையில் ஆள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்.