சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் வர அனுமதி இல்லை: விமான இயக்குநர் அறிவிப்பு

டெல்லி: சீனாவிலிருந்து  வரும் வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் வர அனுமதி இல்லை என விமான போக்குவரத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். விமானம் மற்றும் கப்பல் மூலம் சீனாவிலிருந்து வருபவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர் எல்லைகள் வழியாகவும் இந்தியாவுக்குள் வர அனுமதியில்லை. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவிலிருந்து இந்தியா வரும் வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை.

Related Stories: